ரங்கம் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி 14ம் தேதி உள்ளூர் விடுமுறை

திருச்சி, டிச.8: ரங்கம் ரங்கநாதசுவாமி கோயில் வைகுந்த ஏகாதசி திருவிழாவின் முக்கிய நாளான சொர்க்கவாசல் திறப்பு (பரமபத வாசல் திறப்பு) நடைபெறும் பொருட்டு, திருச்சி மாவட்டத்திற்கு வரும் 14ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை வழங்கி அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறையானது திருச்சி மாவட்டத்தில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கும் பொருந்தும். எனினும் பள்ளி, கல்லூரி தேர்வுகள் நடைபெறுவதில் இந்த விடுமுறை பொருந்தாது. இந்த விடுமுறை நாளில் அரசு அனைத்து துணை கருவூலங்களும், மாவட்ட கருவூலமும் பாதுகாப்பாக குறைந்த பணியாளர்களைக் கொண்டு செயல்படும். இவ்விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு வரும் 18ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என திருச்சி கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Related Stories: