வேலூர், டிச.8: அதிக வட்டி தருவதாக கூறி 3 பெண்களிடம் ₹5 கோடி மோசடி செய்த வழக்கில் கைதான அரசுப்பள்ளி ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடி விவேகானந்தர் நகரை சேர்ந்த ஜான்சிராணி, வேலூர் தொரப்பாடியை சேர்ந்த மலர்கொடி, கொசப்பேட்டையை சேர்ந்த தமிழ்செல்வி ஆகியோரிடம் அதிக வட்டி தருவதாக கூறி வேலூர் கொணவட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை மகேஸ்வரி(53), அவரது கணவர் ஓய்வு பெற்ற எஸ்ஐ தர்மலிங்கம், தோட்டப்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் லதா ஆகியோர் ₹5 கோடி வரை வசூலித்து மோசடி செய்துள்ளனர்.