நன்னிலம் அருகே மது போதையில் மயங்கி விழுந்தவர் பரிதாப சாவு

நன்னிலம், டிச.8: நன்னிலம் அருகே மது போதையில் மயங்கி விழுந்தவர் பரிதாபமாக இறந்தார். திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அடுத்துள்ள கொட்டூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (50). திருமணமானவர், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு, தன் மனைவியோடு கருத்து வேறுபாடு கொண்டு, பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.தனியாக இருந்து வந்த நிலையில், மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமை ஆனார். எப்பொழுதும் குடி போதையில் இருந்து பழக்கப்பட்ட ராஜேந்திரன், அதிக மதுபோதையில் மயங்கிக் கீழே விழுந்தவர். மயக்கம் தெளியாமல், சாலையோரம் தனியார் திருமண மண்டபம் அருகில் இறந்துகிடந்தார். தகவலறிந்த பேரளம் போலீசார், ராஜேந்திரன் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: