கிருஷ்ணராயபுரம், டிச. 8: கிருஷ்ணராயபுரம் அருகே குப்புரெட்டிப்பட்டியில் பள்ளியில் தேங்கி இருந்த மழை நீர் தினகரன் செய்தி எதிரொலியாக மோட்டார் பம்ப் மூலம் வெளியேற்றப்பட்டது. கிருஷ்ணராயபுரம் அருகே பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட குப்புரெட்டிப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 120 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். கடந்த வாரம் பெய்த மழையில் பள்ளி வளாகம் முழுவதும் மழை நீர் தேங்கி இருந்ததால் மாணவ மாணவிகள் பள்ளிக்கு வருவதில் சிரமம் இருந்து வந்தது. இதுகுறித்து நேற்று டிசம்பர் 7ம் தேதி தினகரன் நாளிதழில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக சரி செய்ய வேண்டி பொதுமக்கள் விடுத்த கோரிக்கை செய்தி வந்தது. அதனை தொடர்ந்து நேற்று காலை மாணவ. மாணவிகளின் பெற்றோர் மற்றும் ஊர் பொதுமக்கள் பள்ளியில் தண்ணீர் தேங்கி உள்ளதால் பள்ளியை முற்றுகையிட்டனர்.