நாகை, டிச.8: கொடிநாள் வசூலில் இலக்கைவிட கூடுதலாக வழங்கிட வேண்டும் என கலெக்டர் அருண் தம்புராஜ் வேண்டுகோள் விடுத்தார். படைவீரர் கொடிநாள் அனுசரிப்பு தினத்தை முன்னிட்டு நிதி செலுத்தி வசூலை நாகை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அருண்தம்புராஜ் நேற்று தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து கடந்த ஆண்டு வசூல் அதிகம் செய்தவர்களுக்கும், ஓய்வுபெற்ற ராணுவத்தை சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அப்போது அவர் பேசியதாவது: நமது தாயகத்தை காக்குமம் பணியில் முப்படைகளிலும் பணிகளில் ஈடுபட்டுள்ள படைவீரர்கள் மற்றுமம் படைப்பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ள முன்னாள் படைவீரர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் கவுரவிக்கும் வகையில் ஆண்டு தோறும் டிசம்பர் 7ம் தேதி படைவீரர் கொடிநாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.