ஆவடி: கொரட்டூர் கங்கை அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ரவுடி அரவிந்தன்(24). கடந்த 2018ம் ஆண்டு ஜூலை மாதம் முன் விரோதம் காரணமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக, திருமுல்லைவாயல் மேட்டு தெருவை சேர்ந்த ரவுடிகள் ஆகாஷ்(25), கொரட்டூர் காமராஜர் நகரை சேர்ந்த பிரசாந்த்(27), அவரது தம்பி மணி(25) உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை வழக்கு பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த 3ம் தேதி ஆகாஷ், பிரசாந்த், மணி ஆகிய மூவரும் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்திற்கு சென்று மாலை பாடிக்கு சென்று ெகாண்டிருந்தனர்.