அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிப்பு

ஈரோடு,டிச.7: சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் நினைவுநாளையொட்டி ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஈரோடு தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட நெசவாளர் அணி செயலாளர் சச்சிதானந்தம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவன தலைவர் குறிஞ்சி சிவக்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் குமார்முருகேஷ், செந்தில்குமார், சின்னையன், மாநகர செயலாளர் சுப்பிரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதே போல ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு எஸ்.சி பிரிவு நிர்வாகி சின்னசாமி தலைமை தாங்கினார். மாநகர தலைவர் ரவி முன்னிலை வகித்தார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன்ஈவெரா கலந்து கொண்டு அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் ராஜேஸ்ராஜப்பா, பெரியசாமி, சுரேஸ், புனிதன், வக்கீல் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அம்பேத்கர் சிலை அமைப்பு குழு சார்பில் பன்னீர்செல்வம் பார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பாளர் சண்முகம் தலைமை தாங்கி அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் பல்வேறு திராவிட மற்றும் தலித் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் புதிய பஸ் நிலையம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்ட அம்பேத்காரின் திருவுருவப் படத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பவானிசாகர் சட்டமன்ற தொகுதி செயலாளர் பொன் தம்பிராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஈரோடு மேற்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பில் சத்தியமங்கலம் நகராட்சி வணிக வளாகம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்ட அம்பேத்காரின் திருவுருவப் படத்திற்கு மாவட்ட செயலாளர் பொன்னுசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பவானி: தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு பவானி புதிய பஸ் நிலையம் அருகே அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.பவானி தாலுகா தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். தாலுகா செயலாளர் மாணிக்கம், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலாளர் வேணுகோபால், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் ஜெகநாதன், நிர்வாகிகள் மாதையன்,பாலசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 58 பேருக்கு கொரோனாஈரோடு,டிச.7: ஈரோடு மாவட்டத்தில் புதியதாக நேற்று 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மாவட்டத்தில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 1,06,650 ஆக உயர்ந்துள்ளது. நோய் தொற்று ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று 65 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதையடுத்து இதுவரை 1,05,212 பேர் குணமடைந்துள்ளனர். மருத்துவமனைகளில் 739 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: