விவசாயி பலி

மொடக்குறிச்சி, டிச. 7:  சிவகிரி அருகே உள்ள காகம் பகுதியைச் சேர்ந்தவர் நல்லசிவம் (56) விவசாயி. இவர் நேற்று காலை சாணார்பாளையம் உள்ள தனது தோட்டத்திற்கு சென்று வருவதாக கூறி சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது மகன் பொன்சங்கர் தந்தையைதேடி தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது கிணற்றுக்கு அருகில் நல்லசிவத்தின் செருப்பும், செல்போனும் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த மகன் பொன்சங்கர் இதுகுறித்து சிவகிரி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். மேலும் கொடுமுடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் கிணற்றில் இறங்கி தேடியபோது நல்லசிவம் இறந்த நிலையில் உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: