59 பேருக்கு கொரோனா

திருப்பூர், டிச. 7:  திருப்பூர் மாவட்டத்தில் நேற்று மேலும் 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 97 ஆயிரத்து 521 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று 48 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 95 ஆயிரத்து 877 ஆக உள்ளது.  643 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று மாவட்டத்தில் கொரோனாவுக்கு யாரும் பலியாகவில்லை. இதனால் பலி எண்ணிக்கை 1001 ஆக உள்ளது.

Related Stories: