திருப்பூர் மாநகரில்

சிறுமி உள்பட 9 பேருக்கு டெங்கு காய்ச்சல்

திருப்பூர், டிச: 7: திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக மாநகரில் பல இடங்களில் மழைநீர் தேங்கி கொசு உற்பத்தியும் அதிகரித்துள்ளது. இதனால் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மாநகரில் 9 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.அதன்படி திருப்பூர் லட்சுமிநகரை சேர்ந்த 8 வயது சிறுமி, ஆண்டிபாளையத்தை சேர்ந்த 22 வயது ஆண், ஊத்துக்குளி கருமாரம்பாளையத்தை சேர்ந்த 20 வயது ஆண், 15 வேலம்பாளையம் நேரு தெருவை சேர்ந்த 17 வயது சிறுவன், திருப்பூர் காங்கேயம் ரோட்டை சேர்ந்த 12 வயது சிறுமி, கொடுவாயை சேர்ந்த 32 வயது பெண், அவினாசி வெங்கமேட்டை சேர்ந்த 12 வயது சிறுவன், முதலிபாளையம் சிட்கோ மீனாட்சிநகரை சேர்ந்த 7 வயது சிறுமி உள்பட 9 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: