ஆயுதங்களுடன் 3 சிறுவர்கள் கைது

மதுரை அண்ணாநகர் எஸ்ஐ. சுபா தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர் அப்போது குருவிக்காரன் சாலை பகுதியில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 13 மற்றும் 17 வயதுடைய 3 சிறுவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், இவர்கள் சிம்மக்கல் மற்றும் அண்ணா பஸ்லைய பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது. அவர்கள் மூவரையும் கைது செய்து 3 கத்திகளையும் பறிமுதல் செய்தனர்.

பெண் ஊழியர் மர்மச்சாவு

மதுரை திருமோகூர் அருகே உள்ள காளிகாப்பானை சேர்ந்தவர் முருகன் மகள் சுஸ்மிதா(24). இவர் கடந்த 3 ஆண்டுகளாக மதுரை கருப்பாயூரணி அருகே, வீரபாஞ்சான் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். ஜன.21ம் தேதி சுஸ்மிதாவுக்கும் கீரனூரை சேர்ந்த பால்பாண்டிக்கும் திருமணம் நடந்தது. கடந்த 29ம் தேதியிலிருந்து தனது தாய் வீட்டில் இருந்து சுஸ்மிதா வேலைக்கு சென்று வந்துள்ளார். கடந்த 5ம் தேதி சுஸ்மிதா தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதைப்பார்த்த அவரது தாய் பொற்கொடி கொடுத்த புகாரின் பேரில் ஒத்தக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சுஸ்மிதாவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஊமச்சிகுளம் டிஎஸ்பி காட்வின் ஜெகதீஷ்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: