பெண்ணாடம், டிச. 7: பெண்ணாடம் அடுத்துள்ள சௌந்தரசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணதாசன் (40). இவர் நேற்று சிலுப்பனூர் அருகிலுள்ள வெள்ளாற்றின் கரையோரத்தில் தனக்கு சொந்தமான மாட்டு வண்டியில் மணல் கடத்திக்கொண்டு பெண்ணாடம் ஏழுமலை நகரை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் கோபிநாத் மாட்டு வண்டியை பறிமுதல் செய்தார். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து கண்ணதாசனை கைது செய்தார்.
கடலூர் மாவட்டத்தில் அம்பேத்கர் நினைவு தினம்