(தி.மலை) அரசு பஸ்சை சிறைபிடித்த கல்லூரி மாணவர்கள் கல்லூரிக்கு சென்று வர கூடுதல் பஸ்கள் இயக்க கோரி

திருவண்ணாமலை, டிச.7: திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் கல்லூரிக்கு சென்று வர கூடுதல் அரசு பஸ்களை இயக்க கோரி பஸ்சை சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் பயிலும் மாணவர்கள், திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் இருந்து பிற்பகல் கல்லூரிக்கு செல்ல போதிய பஸ்கள் இயக்க கோரியும், போளூரில் இருந்து திருவண்ணாமலைக்கு கல்லூரி செல்லவும் போதிய அரசு பஸ்களை இயக்க வேண்டும் கோரி நேற்று மாலை திருவண்ணமலை பஸ் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் 20க்கும் மேற்பட்டவர்கள் அரசு பஸ்சை சிறைபிடித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பஸ்கள் பஸ் நிலையத்திலிருந்து வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கிழக்கு போலீசார் விரைந்து வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதை தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: