தலைவர் தேர்தலை ரத்து செய்ய கோரி கிராம மக்கள் அரை நிர்வாண போராட்டம்

கள்ளக்குறிச்சி, டிச. 7:     ரிஷிவந்தியம் அடுத்த இளையனார்குப்பம் ஊராட்சியில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஆதிதிராவிடர் சமூகத்தினர் போட்டியிட இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.ஏழுமலை, மணிகண்டன், வேம்பு ஆகியோர் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் போட்டியிட்டனர். இதில் மணிகண்டன் என்பவர் தேர்தலில் வெற்றிபெற்றார். அவர் போலியான எஸ்சி சான்று பெற்று தேர்தலில் போட்டியிட்டதாகவும், அவர் வெற்றி பெற்றதை ரத்து செய்ய வலியுறுத்தியும் ஏற்கனவே கிராம மக்கள் சார்பில் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் உடனடியாக விசாரணை செய்து இளையனார்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலை ரத்து செய்ய வலியுறுத்தியும் கிராம மக்கள் கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று அரைநிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கிராம மக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Related Stories: