வேலூர், டிச.7: வேலூர் மாநகராட்சி 3வது மண்டல உதவி ஆணையராக வசந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாநகராட்சி 3வது மண்டல உதவி ஆணையராக பொறுப்பு வகித்து வந்த வெங்கடேசன், மீண்டும் அதே மண்டலத்தில் கட்டிட பொறியாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து 3வது மண்டல உதவி ஆணையராக சென்னை திருவேற்காடு தேர்வு நிலை நகராட்சி கமிஷனரான வசந்தி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.