கிருஷ்ணராயபுரம் அருகே மழைநீர் சூழ்ந்த அரசு பள்ளி

கிருஷ்ணராயபுரம், டிச.7: கிருஷ்ணராயபுரம் அருகே பள்ளி வளாகத்தில் தேங்கி கிடக்கும் மழைநீரை அப்புறப்படுத்த மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட குப்புரெட்டிப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு கடந்த வாரம் பெய்த மழையில் பள்ளி வளாகம் முழுவதும் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் பள்ளிக்குள் செல்ல முடியாமல் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் தேங்கியுள்ள மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா போன்ற காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் பள்ளி வளாகத்தில் தேங்கிய மழை நீரை அப்புறப்படுத்தி இனிவரும் காலங்களிலும் இதுபோன்று மழை நீர் தேங்காதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: