ஞாயிறுதோறும் படியுங்கள் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு

தோகைமலை, டிச.7: தோகைமலையில் சட்டமேதை அம்பேத்கரின் நினைவு தின நிகழ்ச்சியில் பல்வேறு கட்சியினர் அம்பேத்கர் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். கரூர் மாவட்டம் தோகைமலை மேற்கு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக டாக்டர் அம்பேத்கரின் 65வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. தோகைமலை பேருந்து நிலையம் அருகே நடந்த நிகழ்ச்சிக்கு மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சக்திவேல், விசிக சட்டமன்ற தொகுதி துணை செயலாளர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செய்தனர்.

திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர். தமிழ்புலிகள் கட்சி சார்பாக சக்திவேல் தலைமையில் அம்பேத்கர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர். குளித்தலை: கரூர் கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் குளித்தலை காந்திசிலை அருகே உள்ள டாக்டர் அம்பேத்கர் உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் தேவேந்திரன் தலைமையில், மாநில விவசாய பாதுகாப்பு இயக்க துணைச் செயலாளர் சக்திவேல், நகர செயலாளர் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். அரவக்குறிச்சி: அரவக்குறிச்சியில் அம்பேத்கர் நினைவுநாளை முன்னிட்டு தமிழ்ப் புலிகள் கட்சியின் சார்பாக அரவக்குறிச்சி தாலுக்கா அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கண்ணதாசன் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மாநில இளம்புலிகள் செயலாளர் தலித் ராயன், அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Related Stories: