திருவள்ளூர்: கனகம்மாசத்திரத்தை சேர்ந்தவர் அஜித்(34). இவரது மாமா அசோக்கை பார்ப்பதற்காக கடம்பத்தூருக்கு சென்றிருந்தார். பின்னர் மீண்டும் நேற்று மாலை தனது பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென திருப்பாச்சூர் அருகே அஜித் தலையில் வெட்டு காயத்துடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். புகாரின்பேரில் திருவள்ளூர் தாலுகா போலீசார் கொலையா என விசாரிக்கின்றனர்.