பொன்னேரி: மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக மற்றும் இளைஞரணி சார்பில் மாநில இளைஞரணி செயலாளரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தடப்பெரும்பாக்கம், வன்னிப்பாக்கம், நாலூர், வெள்ளிவாயல்சாவடி, திருவெள்ளைவாயல், பஜார், தேவதானம், வல்லூர் ஆகிய ஊராட்சிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தெற்கு ஒன்றிய செயலாளர் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் தலைமை வகித்தார். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவுமான டி.ஜெ.கோவிந்தராஜன் பங்கேற்று, 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு அறுசுவை உணவு மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.