விருதுநகர், டிச.6: சமூக நல்லிணக்கத்திற்கான கபீர்புரஸ்கர் விருதிற்கு டிச.10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: கபீர்புரஸ்கர் விருது 2022 குடியரசு தினத்தில் முதல்வரால் சமூக, வகுப்பு நல்லிணக்கத்திற்காக வழங்கப்படுகிறது. 2022ம் ஆண்டுக்கு தகுதியான விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து டிச.10க்குள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சென்னை என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.