காரைக்குடி, டிச.6: காரைக்குடியில் திமுக இளைஞரணி சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஆதரவற்றோர் இல்லத்திற்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. நகர இளைஞரணி அமைப்பாளர் மூர்த்தி வரவேற்றார். முன்னாள் அமைச்சர் தென்னவன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார், நகரசெயலாளர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், மாவட்ட செயலாளர் கேஆர்.பெரியகருப்பன் தலைமை வகித்து பேசுகையில், ‘‘மக்களுக்காக முதல்வர் தொடர்ந்து களத்தில் நின்று செயல்பட்டு வருகிறார். கடந்த நவம்பர் 7ம் தேதி துவங்கி இதுநாள் வரை தொடர்ந்து இரவு, பகல் பாராது மழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.