பாலங்களில் வெடிகுண்டு சோதனை

மானாமதுரை, டிச.6: டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு  மானாமதுரை வைகை பாலத்தில் ரயில்வே போலீசார் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணி மற்றும் வெடிகுண்டு சோதனை செய்தனர். எஸ்.ஐ.சுகுமாறன் மற்றும் தனிப்பிரிவு தலைமைக் காலவர் ராஜ்குமார் மற்றும் காவலர்கள் மானாமதுரை ரயில் நிலையம், வைகை நதிப்பாலம், மதுரை இருப்புபாதைவழியில் உள்ள சிறுபாலங்களில் வெடிகுண்டு தடுப்பு சோதனையில் ஈடுபட்டனர். மேலும் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: