×

விபத்து ஏற்படுத்தும் கால்நடைகள்

தொண்டி,டிச.6:  கிழக்கு கடற்கரை சாலை தொண்டி பகுதியில் அதிகளவில் கால்நடைகள் திரிகின்றது. கிழக்கு கடற்கரை சாலையில் தொண்டியில் செக்போஸ்ட், பாவோடி மைதானம், வட்டாணம் ரோடு, புது பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆடு மாடுகள் கூட்டமாக நிற்கிறது. இரவு நேரங்களில் இருள் சூழ்ந்த பகுதியில் படுத்துக் கொள்வதால் அடிக்கடி விபத்தும் நடக்கிறது. கடந்த காலங்களில் ரோட்டில் திரியும் மாடுகளை பேருராட்சி நிர்வாகம் பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தது. சில வருடங்களாக  இப்பணி நடைபெறாததால் மீண்டும் ஆடு மாடுகள் ரோட்டில் திரிகிறது. பேரூராட்சி நீர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது குறித்து தொண்டி சாதிக் பாட்சா கூறியது, தொண்டி முழுவதும் ரோட்டில் எங்கு பார்த்தாலும் ஆடு மாடு திரிகிறது. டூவீலரில் வருவோர் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். ரோட்டில் திரியும் மாடுகளை பிடித்து உரிமையாளர்களுக்கு கடும் அபராதம் விதிக்க வேண்டும். மாடுகளை அடைக்க பேரூராட்சிக்கு சொந்தமான இடம் இருந்தும் நடவடிக்கை இல்லை. உரிய நடவடிக்கையை பேருராட்சி நிர்வாகம் எடுக்க வேண்டும் என்றார்.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ