பரமக்குடி, டிச.6: பரமக்குடி பெரியகடை பஜாரில் நகை கடை வைத்திருப்பவர் ராஜேந்திரன்(64). இவரது கடையில் இரண்டு பெண்கள் நகை வாங்க வந்துள்ளனர். ராஜேந்திரனிடம் 2 கிராம் தங்க மோதிரம் வேண்டும் என கேட்டு, அவர்கள் கொண்டு வந்த பழைய நகையை வாங்கி விட்டு மீதம் ரூபாய் 3ஆயிரம் ரொக்கப் பணத்தையும் கொடுத்துள்ளார். பின்பு மீண்டும் மூன்று பவுண் எடையுள்ள தங்க செயின் வாங்குவதாக கூறி செயின் மாடல்கள் பார்க்க கேட்டுள்ளனர். ராஜேந்திரன் 10 தங்க செயின்களை எடுத்துக்காட்டியுள்ளார். அந்த இரண்டு பெண்களும் மாடல்களை பார்ப்பது போல் நடித்து 3 பவுன் எடையுள்ள ஒரு செயினை திருடி விட்டு அதற்கு பதிலாக அவர்கள் கொண்டுவந்த கவரிங் செயினை வைத்துள்ளனர்.