×

கவரிங் செயினை கொடுத்து நகையை திருடி சென்ற பெண்கள்

பரமக்குடி, டிச.6:  பரமக்குடி பெரியகடை பஜாரில் நகை கடை வைத்திருப்பவர் ராஜேந்திரன்(64). இவரது கடையில் இரண்டு பெண்கள் நகை வாங்க வந்துள்ளனர். ராஜேந்திரனிடம் 2 கிராம் தங்க மோதிரம் வேண்டும் என கேட்டு, அவர்கள் கொண்டு வந்த பழைய நகையை வாங்கி விட்டு மீதம் ரூபாய் 3ஆயிரம் ரொக்கப் பணத்தையும் கொடுத்துள்ளார். பின்பு மீண்டும் மூன்று பவுண் எடையுள்ள தங்க செயின் வாங்குவதாக கூறி செயின் மாடல்கள் பார்க்க கேட்டுள்ளனர். ராஜேந்திரன் 10 தங்க செயின்களை எடுத்துக்காட்டியுள்ளார். அந்த இரண்டு பெண்களும் மாடல்களை பார்ப்பது போல் நடித்து 3 பவுன் எடையுள்ள ஒரு செயினை திருடி விட்டு அதற்கு பதிலாக அவர்கள் கொண்டுவந்த கவரிங் செயினை வைத்துள்ளனர்.

பின்னர், இரண்டு பெண்களும் சென்று விட்டனர். ஆனால் திரும்பி வரவே இல்லை உடனே ராஜேந்திரன் மறுநாள் கடையில் உள்ள நகைகளை சரி பார்த்துள்ளார். அப்போது, அந்த பெண்களிடம் எடுத்துக்காட்டிய 10 தங்க செயினில் ஒரு கவரிங் செயின் இருந்ததை கண்டு திடுக்கிட்டார். இது குறித்து அவர் பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 2 பெண்களையும் தேடி வருகின்றனர். மேலும் ராஜேந்திரன் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் நகை வாங்க வந்த அந்த இரண்டு பெண்களின் காட்சிகள் பதிவாகியுள்ளது. போலீசார் அந்த வீடியோ பதிவுகளை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED தோல்வி பயத்தால் கிணற்றில் குதித்த மாணவன் மீட்பு