விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு

அவனியாபுரம்: பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, மதுரை விமானநிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் உள்வளாகம், ஓடுதளத்தை கண்காணிப்பு கோபுரங்கள் மூலமும், விமான நிலைய வெளிப்புற வளாகத்தை மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும், விமான நிலைய நுழைவாயிலில் சோதனை சாவடி அமைத்து வெளி வளாகம், டூவீலர் ரோந்து ஆகியவற்றை மாநகர போலீசாரும் கண்காணித்து வருகின்றனர். மேலும், அதிவேக அதிரடிப்படை வீரர் குழு, வெடிகுண்டு தடுப்பு பிரிவினர், மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பயணிகளிடம் தீவிர சோதனை

Related Stories: