மதுரை, டிச. 6: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், கே.கே.நகர் ஆர்ச் அருகே உள்ள ஜெயலலிதா, எம்ஜிஆர் சிலைக்கு, மாநகர் மாவட்ட துணைச்செயலாளர் ராஜா தலைமையில், அதிமுகவினர் மாலை அணிவித்தனர். இந்நிகழ்ச்சியில், எம்ஜிஆர் மன்ற செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், முன்னாள் மேயர் திரவியம், மகளிரணி நிர்வாகி சண்முகவள்ளி, முன்னாள் எம்.எல்.ஏ அண்ணாத்துரை, மாநில இளைஞரணி நிர்வாகி குமார் உள்ளிட்ட கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.