கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பலி

திருமங்கலம், டிச. 6: கள்ளிக்குடி அருகே, கிணற்றில் எதிர்பாராமல் தவறி விழுந்து விவசாயி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளிக்குடி அருகே உள்ள இலுப்பன்குளத்தை சேர்ந்தவர் வெள்ளையத்தேவன் (55), விவசாயி. இவர், நேற்று மாலை தனது தோட்டத்தில் உள்ள கிணற்றில் பக்கவாட்டுச் சுவர்களில் இருந்த செடி, கொடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கிணற்றில் அவர் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்தில் இறந்தார். தகவலின்பேரில், கள்ளிக்குடி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: