திருப்பூர், டிச. 6: திருப்பூர் வடக்கு சட்டம் ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய கணேசன் உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி சேலம் மாநகருக்கு மாற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவருக்கு பதிலாக திருமுருகன்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த கந்தசாமி, திருப்பூர் வடக்கு சட்டம் ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக நியமனம் செய்து மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.