திருப்பூர். டிச. 6: திருப்பூர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் ஏராளாமான அரசு துறை சார்ந்த அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அலுவலகத்தில் சுமார் 1000க்கு மேற்பட்ட பணியாளர்கள், அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும் பல்வேறு தேவைகளுக்காக ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகளின் கார்கள் நிற்கும் வளாகத்தில் பொதுமக்கள், போலீசார்ம், அரசு அலுவலர்கள் தங்களின் இரண்டு, நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி வந்தனர்.