திருமுருகன்பூண்டி, டிச. 6: திருப்பூர், திருமுருகன்பூண்டி பகுதியில் உள்ள முருகன் காட்டன் மில்லில் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை சேர்ந்த சண்முகம்(22) கிளீனிங் வேலை செய்து வருகிறார். அதே கம்பெனியில் வாட்ச்மேனாக தென்காசியை சேர்ந்த முத்துராஜா(45) பணிபுரிந்தார். சம்பவத்தன்று சண்முகம், வெங்கடாச்சலம் இருவரும் துண்டு கட்டிக்கொண்டு பாத்ரூம் சென்று உள்ளனர். இதனைபார்த்த முத்துராஜா அவர்களை தகாத வார்த்தையில் திட்டி உள்ளார்.