வரி பாக்கியை செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்

ஈரோடு, டிச. 6: ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:ஈரோடு மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை இணைப்பு கட்டணம், குத்தகை இனம், வரியில்லா இனங்கள் ஆகியவற்றை உடனடியாக செலுத்த வேண்டும். மாநகராட்சி பகுதிகளுக்குள் அடிப்படை மற்றும் அபிவிருத்தி பணிகள் செய்வதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும், 2021-2022ம் ஆண்டு நிறைவடைய உள்ள நிலுவை இனங்களை செலுத்தாத உரிமதாரர்களின் வீட்டு குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, மாநகராட்சி சட்ட விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories: