விடுமுறை தினத்தையொட்டி அண்ணாமலையார் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து தரிசனம்

திருவண்ணாமலை, டிச.6: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று விடுமுறை தினத்தையொட்டி சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழாைவயொட்டி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதனால் பக்தர்கள் வருகை குறைந்து காணப்பட்டது. இந்நிலையில், கார்த்திகை தீபத்திருவிழா கடந்த வாரத்துடன் நிறைவடைந்ததையொட்டி, விடுமுறை தினமான நேற்று திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வழக்கத்தை விட நேற்று கூட்டம் அலைமோதியதால், கட்டண தரிசனம் மற்றும் பொது தரிசன வரிசையில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு, அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

Related Stories: