வேட்டவலம் அருகே 1000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

வேட்டவலம், டிச.6: வேட்டவலம் அருகே 1000 லிட்டர் சாராய ஊறலை போலீசார் அழித்தனர். வேட்டவலம் எஸ்.ஐ ராமச்சந்திரன் தலைமையில் எஸ்.எஸ்.ஐ.க்கள் பன்னீர் செல்வம், காமராஜ், தனிப்பிரிவு காவலர் சசிகுமார் மற்றும் போலீசார் நேற்று வேட்டவலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்ன ஓலைப்பாடி கிராமத்தில் தீவிர சாராய ஒழிப்பு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது செல்லியம்மன் கோயில் அருகே உள்ள மலைபகுதியில் 3 பிளாஸ்டிக் பேரல், பிளாஸ்டிக் குடம், கேன் ஆகியவற்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1000 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்து கீழே கொட்டி அழித்தனர். மேலும் வழக்குப்பதிந்து சாராயம் காய்ச்சிய நபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: