மழையால் இடிந்த வீடுகள் விடுதலை சிறுத்தைகள் ஆய்வு

கடலூர், டிச. 6: கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பாலன் காலனியில் மழை வெள்ளத்தால் பல வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன் நேரில் சென்று இடிந்த வீடுகளை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். மாநில துணை செயலாளர் சொக்கு, கடலூர் நகர பொருளாளர் கோபால் மற்றும் நிர்வாகிகள் சூர்யா, அஜித், திருநாவுக்கரசு, கார்த்தி, ராஜ்குமார் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் உடன் இருந்தனர். அதிகாரிகளிடம் உடனடியாக பேசி விரைவில் வீடு கட்டி தருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட பாலன் காலனி பகுதி மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

Related Stories: