கடலூர், டிச. 6: சேறும், சகதியுமாக காணப்படும் கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தை உடனடியாக சீரமைக்க பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வடகிழக்கு பருவமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் கனமழை பெய்தது. இதன் காரணமாக குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. மேலும் ஆறு மற்றும் குளங்களில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடந்த ஒரு வாரமாக மழை ஓய்ந்து காணப்படுவதால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் வடிந்து பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். இந்நிலையில் கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானத்திலும் மழைநீர் தேங்கி நின்றது. தற்போது ஒருவாரமாக வெயில் அடிப்பதால் மழைநீர் முற்றிலும் வடிந்துவிட்டது.