தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட வாலிபர் சடலமாக மீட்பு

விருத்தாசலம், டிச. 6: விருத்தாசலம் அடுத்த வி.குமாரமங்கலம் கிராமத்தை சேர்ந்த வினோத்குமார்(21), அவரது நண்பர்கள் மதியழகன்(21), ரஞ்சித்குமார்(23), விக்ரம்(24) ஆகிய 4 பேரும் கடந்த 3ம் தேதி வி.குமாரமங்கலம் அணைக்கட்டில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக வினோத்குமார், மதியழகன் உள்பட 4 பேரும்  தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விருத்தாசலம் தீயணைப்பு துறை நிலைய அதிகாரி மணியப்பன் தலைமையிலான வீரர்கள் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் மதியழகன், ரஞ்சித்குமார், விக்ரம் ஆகியோர் உயிருடன் மீட்கப்பட்டனர். இதில் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட வினோத்குமாரை தேடும் பணி நடந்தது. இந்த நிலையில் மணிமுக்தாற்றில் கீழப்பாலையூர் அருகே சடலம் ஒன்று இருப்பதாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்று தீயணைப்பு துறையினர் மற்றும் கம்மாபுரம் போலீசார் பார்த்தபோது, வினோத்குமார் என தெரியவந்தது. இதையடுத்து சடலத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories: