விருத்தாசலம் அருகே நீரில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

விருத்தாசலம், டிச. 6: விருத்தாசலம் அடுத்த டிவி புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் மகன் சந்தோஷ்குமார்(12). இவன் ஓலையூரில் உள்ள தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணியளவில் வெள்ளாற்றில் குளிக்கச் சென்றுள்ளான். அப்போது வெள்ளாற்றில் தண்ணீர் அதிகமாக சென்றதால் ஆற்றில் மூக்கியுள்ளான். இதை பார்த்த கிராம மக்கள் ஆற்றில் இறங்கி சிறுவனை மீட்டு பார்த்தபோது மயங்கிய நிலையில் கிடந்துள்ளான். உடனடியாக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சந்தோஷ்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள், அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து கருவேப்பிலங்குறிச்சி போலீசார், சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: