நெல்லையில் கல்லூரி மாணவி திடீர் மாயம்

நெல்லை, டிச. 6: நெல்லையில் கடைக்குச் சென்ற கல்லூரி மாணவி மாயமானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். நெல்லை சந்திப்பு கருப்பந்துறை வேதக்கோவில் தெருவை சேர்ந்தவர் லூர்து சபரிராஜன். இவரது மகள் அந்தோணி ஆஷிகா(21). கல்லூரி மாணவியான இவர் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம்காலை  புத்தகங்களை ஜெராக்ஸ் எடுத்துவிட்டு வருவதாக வீட்டில் கூறிச்சென்றவர் பின்னர் திரும்பி வரவில்லை. அவரை உறவினர்கள், தோழிகள் வீட்டில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின்பேரில் சந்திப்பு போலீசார் வழக்குபதிந்து  அவரை தேடி வருகின்றனர்.

Related Stories: