கிருஷ்ணராயபுரம், டிச.6: தொடர் மழையால் கிருஷ்ணராயபுரம் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் மழைநீர் ஒழுகி கோப்புகள் வீணாகி வருவதால் கட்டிடத்தை பராமரிப்பு பணி செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் இயங்கி வருகிறது. இந்த அங்கன்வாடி மையங்களின் தலைமை அலுவலகம் கிருஷ்ணராயபுரம் அடுத்த மேட்டுதிருக்காம் புலியூரில் அமைந்துள்ளது. மேட்டுதிருக்காம்புலியூர் உள்ள இந்த அலுவலகம் கட்டி பல ஆண்டுகள் ஆகிறது. இதனால் கட்டிடத்தின் உறுதி தன்மையை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.