சென்னை: செங்கல்பட்டு அடுத்த பெரிய நத்தம் கெங்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்த லோகநாதன் மனைவி வேதவள்ளி. இவர், ஆசிரியர் படிப்பு முடித்து அரசு பள்ளி வேலைக்காக முயற்சி செய்து வந்துள்ளார். அப்போது, லோகநாதனின் நண்பர் அனுமந்த பொத்தேரியை சேர்ந்த சரவணன் மூலம் தண்டையார்பேட்டை பிரின்ஸ் வில்லேஜ் பகுதியை சேர்ந்த ரவிக்குமார் (50) அறிமுகமானார். இவர், ‘‘இந்தியா முழுவதும் செயல்படும் மத்திய அரசு பள்ளிகளான கேந்திர வித்யாலாயா பள்ளியில் ஆசிரியர் மற்றும் அலுவலக பணிக்கு ஆட்கள் எடுப்பதாகவும், அந்த பள்ளி தலைமை நிர்வாகத்தில் தனக்கு நேரடி தொடர்பு இருப்பதால், வேலை வாங்கி தருகிறேன் என்றும் லோகநாதனிடம் கூறியுள்ளார்.
மேலும், இதற்காக வேதவள்ளியிடம் ரூ.13 லட்சத்தை ரவிக்குமார் பெற்றுள்ளார். ஆனால், ஒரு வருடமாகியும் வேலையும் வாங்கி தரவில்லை. பணத்தையும் திரும்ப தராமல் தலைமறைவாக இருந்ததாக கூறப்படுகிறது.