நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளுடன் இணைந்து வெற்றிக்கு பாடுபட வேண்டும் நீடாமங்கலத்தில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூ. கூட்டத்தில் தீர்மானம்

நீடாமங்கலம்,டிச.5: திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளுடன் இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெற்றிக்காக பாடுபட வேண்டும் என்று நீடாமங்கலத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீடாமங்கலம் ஒன்றியக் குழு கூட்டம் ஒன்றியக்குழு அலுவலகத்தில் நடைப்பெற்றது.கூட்டத்திற்கு கைலாசம் தலைமை வகித்தார்.மாநிலகுழு உறுப்பினர் நாகராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலியபெருமாள்,கந்தசாமி முன்னிலை வகித்தனர்.

நடைபெற்றுள்ள பணிகள் குறித்து ஒன்றிய செயலாளர் ஜான்கென்னடி அறிக்கை வாசித்தார்.வரவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளுடன் இணைந்து கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றிக்கும் தீவிரமாக உழைத்திட வேண்டும்.நீடாமங்கலம் பேரூராட்சியில் கட்சியின் பலத்திற்கு ஏற்றவாறு 5வார்டுகள் வரை கேட்டு பெறுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: