நீடாமங்கலம்,டிச.5: நீடாமங்கலம் ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டார கிளை மாநாடு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்ட கிளை தலைவர் ராஜா தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட தலைவர் வசந்தன், மாவட்ட செயலாளர் செந்தில் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாநாட்டில் நீடாமங்கலம் வட்ட கிளை தலைவராக நேரு, வட்ட கிளை செயலாளராக கட்டக்குடி முருகேசன் பொருளாளராக குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர் . மாநாட்டில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும். நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும்.ஊராட்சி செயலர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் முத்துக்குமார் நன்றி கூறினார்.