திருத்துறைப்பூண்டியில் கலைஞர் உணவகம் அமைக்க வேண்டும்

திருத்துறைப்பூண்டி, டிச. 5: திருவாரூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் வக்கீல் நாகராஜன் தமிழக அரசு மற்றும் கலெக்டருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: திருத்துறைப்பூண்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 24 வார்டு உள்ளது. இங்கு வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளோர் அதிகமாக வசித்து வருகின்றனர். திருத்துறைப்பூண்டி,வேதாரண்யம் சாலையில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையில் அம்மா உணவகம் அமைந்துள்ளது. இங்கு போதுமான நபர்களுக்கு உணவு வழங்க இயலவில்லை. திருத்துறைப்பூண்டி மார்க்கட்டிங் கமிட்டி வளாகத்தில் புதிதாக கலைஞர் உணவகம் அமைத்தால் பொதுமக்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும். ஒரு ரூபாய் இட்லி, ரூ.5க்கு சாம்பார் சாதம், ரூ.5க்கு தயிர் சாதம் வழங்கினால் பொதுமக்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். மார்க்கெட்டிங் கமிட்டி வளாகத்தில் உணவகம் அமைக்க போதுமான இடவசதி உள்ளது. தமிழகம் முழுவதும் 500 கலைஞர் உணவகம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. திருவாரூர் கலெக்டர் திருத்துறைப்பூண்டியில் கலைஞர் உணவகம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories: