குடிநீரை காய்ச்சி குடிக்க அறிவுறுத்தல் பாம்பு கடித்து பெண் பலி

கிருஷ்ணராயபுரம், டிச.5: கிருஷ்ணராயபுரம் அருகே வயலூர் ஊராட்சி கணக்கம்பட்டியை சேர்ந்த ராமன் மனைவி மீனாட்சி (60). சம்பவத்தன்று தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்பொழுது பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது. உடனடியாக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மீனாட்சி இறந்துவிட்டார். இதுகுறித்து அவரது மகன் தங்கவேல் கொடுத்த புகாரின் பேரில் லாலாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: