விவசாய நிலத்தில் நீர் இடி இறங்கியது

இளம்பிள்ளை, டிச.5: மகுடஞ்சாவடி அருகே கன்னந்தேரி ஊராட்சி, ஒண்டிக்கடை, கரட்டுகாட்டில் வசித்து வருபவர் விவசாயி முத்துசாமி என்பவரது விவசாய நிலத்தில், கடந்த 3ம் தேதி இரவு பெய்த கனமழையின் போது நீர் இடி இறங்கியது. அப்போது நிலத்தின் அடியிலிருந்து நீர் கொப்பளித்து வந்தது. அவ்வாறு வந்த நீர், அவரது நிலத்தில் குளம்போல் தேங்கி உள்ளது. இதனை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘எங்கள் பகுதியில் அதிக அளவிலான மழை பெய்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த மழை நீரை பயன்படுத்தி நெல், கரும்பு உள்ளிட்டவற்றை சாகுபடி செய்ய முடியும். ஆயிரம் அடிக்குமேல் போர்வெல் அமைத்தால் கூட இவ்வளவு தண்ணீர் வராது. ஆனால், இந்த நீர் இடியில் தண்ணீர் கொப்பளித்து வருவது மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கிறது,’ என்றனர்.

Related Stories: