பஸ்சில் இருந்து விழுந்த கண்டக்டர் பலி

சேலம், டிச. 5: சேலத்தில் தனியார் பேருந்தில் இருந்து தவறி விழுந்த கண்டக்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே புதுப்பாளையத்தை சேர்ந்தவர் மதன்குமார் (24). இவர் ராசிபுரத்தில் இருந்து சேலம் வரும் தனியார் பஸ்சில் பயிற்சி கண்டக்டராக இருந்து வந்தார். கடந்த 27ம் தேதி ராசிபுரத்தில் இருந்து பஸ் சேலம் வந்து கொண்டிருந்தது. திருவாகவுண்டனூர் பைபாசில் வளைவில் வேகமாக திரும்பியபோது பேருந்தில் பின்னால் படியில் நின்று கொண்டிருந்த மதன்குமார் தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் மாலை அவர் உயிரிழந்தார். இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: