கனமழையால் வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது

சங்ககிரி, டிச.5: சங்ககிரி சுற்றுவட்டாரத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு கனமழை பெய்தது. இந்த மழை நேற்று அதிகாலை வரை நீடித்தது. இதில், சங்ககிரியில் 58.2 மி.மீ., பதிவானது. மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. சங்ககிரி பால்வாய் தெருவில் சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் சூழ்ந்து, குடியிருப்புகளில் புகுந்தது. இது குறித்து தகவல் அறிந்த சங்ககிரி வருவாய் துறையினர் மற்றும் பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு சென்று, பொக்லைன் மூலம் தேங்கி நின்ற தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். இதேபோல், சங்ககிரி வடுகபட்டி கிராமத்தை சேர்ந்த தேவகி என்பவரது ஓட்டு வீடு இடிந்து விழுந்து சேதமடைந்தது.

Related Stories: