ராசிபுரத்தில் தொடர் மழை அலவாய் மலையில் திடீர் நீரூற்று

ராசிபுரம், டிச.5: ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு பெய்த மழையால் அலவாய் மலை அடிவாரத்தில் நீரூற்று ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக தொடர் மழை பெய்தது. இதனால் அனைத்து நீர்நிலைகள் நிரம்பி நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. இதில் அலவாய் மலையின் அடிவாரப் பகுதியில் ஏரி நிரம்பி வருகிறது.

நேற்று முன்தினம் இரவு பெய்த தொடர் மழையால் சித்தர் கோயில் அலவாய் மலைப்பகுதியில் நீரூற்று ஏற்பட்டுள்ளது. தகவல் தெரிந்ததும் ராசிபுரம், வெண்ணந்தூர், குருசாமிபாளையம், ஆண்டலூர் கேட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இளைஞர்கள் மற்றும் குடும்பத்துடன் வந்த பொதுமக்கள் நீரூற்றை கண்டு ரசித்து சென்றனர். தற்போது அப்பகுதி ஒரு சுற்றுலா தளம் போல காணப்படுகிறது. ஆயாகோயில் அருகே தடுப்பு அணை நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. அதேபோல், கோரையாறு பகுதியில் உள்ள சித்தூர் அருவியிலும் தற்போது தண்ணீர் வர துவங்கி உள்ளது.

Related Stories: