எருமப்பட்டி வட்டாரத்தில் உலக மண்வள நாள் விழிப்புணர்வு கூட்டம்

சேந்தமங்கலம், டிச. 5: எருமப்பட்டி வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், உலக மண் வள நாளை முன்னிட்டு தேவராயபுரம், பவித்திரம் புதூர் கிராமத்தில் மண் வள நாள் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. வேளாண் உதவி இயக்குனர் கவிதா கூட்டத்தை தொடங்கி வைத்து பேசுகையில், மண் மற்றும் நீர் மாதிரியின் அவசியம் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக அமையும். உயிர் உரங்கள், பசுந்தாள் உரங்களை கொண்டு மண்வளத்தை பாதுகாக்கலாம். மண் பரிசோதனை செய்து மண்வள அட்டையை பெற்றுக்கொண்டு, அதற்கேற்ப ஊட்டச்சத்துக்களை கொடுத்து பயிர் செய்தால், அதிக லாபம் பெறலாம்,’ என்றார். நிகழ்ச்சியில் வேளாண்மை அலுவலர் மலர்கொடி, உதவி வேளாண் அலுவலர் முருகேசன், அட்மா தொழில்நுட்ப உதவி மேலாளர்கள் கவிசங்கர், நடராஜ் மற்றும் முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: